தென்காசியில் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சியின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து டிஐஜியும் எஸ்பியும் நேரில் சென்று ஆய்வு செய்தனர். நெல்லை மாவட்டம் தென்காசியில் வரும் ஆறாம் தேதி அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திலிருந்தும், பல்வேறு கட்சியில் இருந்தும் சுமார் 20000 பேர் அதிமுகவில் இணைய உள்ளனர். இந்நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் பன்னீர் செல்வமும் பங்கேற்க உள்ளனர்.
இந்த விழாவிற்காக அரங்கம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் வரும் வழி மற்றும் பாதுகாப்பு வழிமுறைகள் ஆகியவை குறித்து நெல்லை சரக டிஐஜி பிரவீன் குமாரும் நெல்லை மாவட்ட எஸ்பி அருள்சக்தி குமாரும் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
Discussion about this post