பெர்த் டெஸ்ட்: கோலி-ரஹானே ஆட்டத்தால் இந்திய அணி 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் 172 ரன்கள் சேர்ப்பு

பெர்த் டெஸ்ட் போட்டியின் 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய கிரிக்கெட் அணி நிதானமாக ஆடி 172 ரன்கள் சேர்த்துள்ளது.

இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி ஆஸ்திரேலியாவின் பெர்த்தில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சின் முதல் நாள் ஆட்டத்தில் தொடக்கத்தில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி அபாரமாக ஆடி 326 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தது.

இன்று களமிறங்கிய இந்திய அணி 10 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. முரளி விஜய் ரன் ஏதுமின்றி அவுட் ஆனார். ராகுல் 2 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். மூன்றாவதாக புஜாரா 24 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

அடுத்ததாக சேர்ந்த ரஹானே – கோலி ஜோடியினர் நிதானமான ஆடி இந்திய அணிக்கு வலுசேர்த்தனர். கோலி அரை சதம் கடந்து 82 ரன்களில் ஆட்டமிழக்காமல் உள்ளார். ரஹானே 17-வது அரை சதத்தை பதிவு செய்து ஆட்டமிழக்காமல் உள்ளார். டெஸ்ட் போட்டியின் 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 3 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் சேர்த்துள்ளது.

Exit mobile version