ராஜஸ்தானில் இந்திய விமானப்படையினர் போர் பயிற்சி

ராஜஸ்தான் மாநிலம் போக்ரானில், இந்திய விமானப்படை பிரம்மாண்ட போர் பயிற்சியில் ஈடுபட்டது. 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை வாயு சக்தி என்ற பெயரில் ஒத்திகை நடைபெறும். இந்த ஆண்டுக்கான பயிற்சியில், மொத்தம் 140 ஜெட்ரக விமானங்கள் ஈடுபட்டன. போர் விமானங்கள், ஏஎன் 32, சி130 போன்ற சரக்கு விமானங்கள், எம்.ஐ 17, எம்.ஐ 35 ரக ஹெலிகாப்டர்களும் பங்கு பெறுகின்றன.

இலக்கின் மீது ஏவுகணைகளை வீசுதல், ஹெலிகாப்டரில் இருந்து துப்பாக்கிச்சூடு நடத்துவது, விமானத்திலிருந்து தரைஇலக்கு தாக்கப்படுவது போன்ற பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

Exit mobile version