இந்திய விமானப்படை விமானிகளுக்கு தலை வணங்குகிறேன் : கெஜ்ரிவால்

எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில் இருக்கும் பாகிஸ்தான் தீவிரவாத முகாம்களை இந்திய விமானங்கள் தாக்கி அழித்தன. இன்று அதிகாலை 3.30 மணிக்கு 12 மிராஜ் 2 ஆயிரம் ரக விமானங்கள் இந்த தாக்குதலில் ஈடுபட்டன. இந்திய விமான படை நிகழ்த்திய தாக்குதலில் 300 தீவிரவாதிகள் வரை பலியாகியிருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே, இந்திய விமானப்படை வீரர்களுக்கு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலும் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் டுவிட்டர் பதிவில், பாகிஸ்தானின் தீவிரவாத நிலைகள் மீது தாக்குதல் நடத்தி இந்தியாவை பெருமைக்கொள்ள செய்த இந்திய விமானப்படை விமானிகளுக்கு தலை வணங்குவதாக குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version