முதல் ஒருநாள் போட்டி: இந்தியா-மேற்கிந்திய தீவுகள் அணிகள் இன்று மோதல்

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதும் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது.

மேற்கிந்திய தீவுகள் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 20 ஓவர் கிரிக்கெட் தொடரை வென்றுள்ளது. இந்தநிலையில், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. இதன் முதல் போட்டி கயானாவில் இன்று நடைபெறுகிறது.

20 ஓவர் கிரிக்கெட் தொடரை வென்ற உற்சாகத்தில் உள்ள இந்திய அணி, இந்த போட்டியிலும் வெற்றி பெற தீவிர முனைப்பு காட்டும் என்பதாலும், அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்க மேற்கிந்தி தீவுகள் அணி தயார்நிலையில் இருக்கும் என்பதாலும் இன்றைய போட்டி பரபரப்பாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

இரு அணிகளும், இதுவரை 127 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் மோதி உள்ளன. அதில், இந்தியா 60 போட்டிகளிலும், மேற்கிந்திய தீவுகள் அணி 62 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. 2 போட்டிகள் சமனிலும், 3 போட்டிகள் முடிவுகள் எட்டப்படாமலும் முடிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version