போராட்டக்காரர்களின் தாக்குதலில் சிக்கிய இந்தியா டுடே பெண் செய்தியாளர் மீட்பு!

சபரிமலை நடை இன்று திறக்கப்பட்டதையொட்டி, ஏராளமான பக்தர்கள் அங்கு செல்லத் தொடங்கியுள்ளனர். பெண்களும் சபரிமலை செல்லலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, பெண் பக்தர்களும் சபரிமலை செல்லத் தொடங்கினர்.

அதே நேரம் இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. பழங்குடியின பெண்கள் சாலைகளில் திரண்டு, சபரிமலை செல்லும் வாகனத்தில் பெண்கள் இருக்கின்றனரா என சோதனை நடத்தி வருகின்றனர். அப்படி பெண்கள் இருக்கும் பட்சத்தில் அவர்களிடம் சபரிமலை செல்லலாம் என காலில் விழுந்து கெஞ்சி வருகின்றனர்.

அதே நேரம் சில இடங்களில் பெண் பக்தர்களுக்கு எதிராக வன்முறை சம்பவங்களும் அரங்கேறின. இந்நிலையில், நில்லக்களில் இந்தியா டுடே பெண் செய்தியாளர் மசாமி சிங் மற்றும் செய்திக்குழுவினரை போராட்டக்காரர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து அங்கிருந்த போலீசார் அவர்களை பத்திரமாக மீட்டு, தங்களது வாகனத்தில் ஏற்றினர். செய்தியாளர்கள் மீதான தாக்குதலால் சபரிமலை விவகாரம் மேலும் பரபரப்படைந்துள்ளது.

Exit mobile version