கடனை வசூல் செய்வதை விட தன்னை பிடிப்பதிலேயே மத்திய அரசு மும்முரமாக உள்ளது – விஜய் மல்லையா

கடனை வசூல் செய்வதை விட தன்னை பிடிப்பதில் மத்திய அரசு தீவிரம் காட்டுவதாக விஜய் மல்லையா தெரிவித்துள்ளார்.

பொதுத்துறை வங்கிகளில் 9 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்றுவிட்டு அதனை செலுத்தாமல் லண்டனுக்கு தப்பியோடினார் விஜய் மல்லையா. அவரை இந்தியா கொண்டு வரும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. இது தொடர்பான வழக்கு லண்டன் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில் அவரை இந்தியா கொண்டுவர லண்டன் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த மல்லையா, என்னிடம் இருந்து பணத்தை வாங்குவதற்கு பதிலாக என்னை இந்தியாவுக்கு நாடு கடத்துவதில் தான் மத்திய அரசு தீவிரம் காட்டுகிறது என கூறியுள்ளார்.

Exit mobile version