மேட்டூர் அணையிலிருந்து நீர் திறப்பு 3000 கன அடியாக அதிகரிப்பு

டெல்டா மாவட்டங்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக மேட்டூர் அணையிலிருந்து மூவாயிரம் கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

போதிய பருவமழை பெய்யாததால் ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்கும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 51.32 கன அடியாக உள்ளது. அணையின் நீர் இருப்பு 18.65 டிஎம்சியாகவும், நீர் வரத்து 51 கன அடியாகவும் உள்ளது.

Exit mobile version