மின்சாரத்துறையின் குளறுபடியான செயலால் மின்கட்டணம் அதிகரிப்பு

மின்சாரத்துறையின் குளறுபடியான செயல்பாடுகளால், மின்கட்டணம் செலுத்த சிரமப்படுவதாக, திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பகுதியைச் சேர்ந்த ஏழை, எளிய மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்த 100 யூனிட் இலவச மின்சாரத்தால் பயன்பெற்று வந்த தங்களுக்கு, திமுக ஆட்சியில், மின்வாரிய அதிகாரிகளின் குளறுபடியான மின் கணக்கீட்டால், அதிக கட்டணம் செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயத் தொழிலாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். கொரோனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இரட்டிப்பான மின்கட்டணத்தை செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளதை சரி செய்ய, அரசுக்கு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Exit mobile version