ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி அதிகரிப்பு: அரசாணை வெளியீடு

ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி 17 சதவீதமாக உயர்த்தி வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படியானது 12 சதவீதத்தில் இருந்து 17 சதவீதமாக உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை பின்பற்றி தமிழக அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அகவிலைப்படியை 17 சதவீதமாக உயர்த்தி வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, அகவிலைப்படி உயர்வு ஜூலை மாதம் 1 ஆம் தேதி முதல் முன்தேதியிட்டு வழங்கப்படும் என்றும், ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான அகவிலைப்படி நிலுவைத் தொகை வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்றும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Exit mobile version