பிரபல ஜவுளிக்கடையில் 2வது நாளாக வருமான வரித்துறை சோதனை

மதுரையில் பிரபல ஜவுளிக் கடையில் இரண்டாவது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

மதுரை தெற்குமாசி வீதி விளக்குத் தூண் அருகே உள்ள பிரபல ஜவுளிக்கடையில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.வரி எய்ப்பு செய்யப்பட்டுள்ளதாக புகார் எழுந்த நிலையில், சென்னையில் இருந்து 34 பேர் கொண்ட வருமான வரித்துறையினர் ஜவுளிக்கடை மற்றும் குடோனில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். நேற்று காலை 11 மணிக்கு தொடங்கிய சோதனை 20 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வருகிறது. இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Exit mobile version