சென்னையில் முதல்வரின் குறை தீர்க்கும் திட்டம் தொடக்கம்

முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டத்தை சென்னையில் மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார். 

முதல்வரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டம்’ என்ற ஒரு சிறப்பு குறை தீர்க்கும்  திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தை முதலமைச்சர் சேலத்தில் தொடங்கி வைத்தார்.

இந்தநிலையில், சென்னையில் மக்கள் குறை தீர்ப்பு திட்டத்தை மாவட்ட ஆட்சியர் சீத்தாலட்சுமி தொடங்கி வைத்தார். செனாய் நகரில் நடைபெற்று வரும் இந்தக் கூட்டத்தில் மக்களிடம் பெறப்படும் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.  கணினியில் பதியப்பட்டு சம்பந்தப்பட்ட துறைக்கு ஒருவார காலத்திற்குள் அனுப்பப்படும். இதைத்தொடர்ந்து விரைவில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். இந்தத் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு 76 லட்சத்து 25ஆயிரம் ரூபாயை ஒதுக்கி உள்ளது. 

Exit mobile version