தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் கனமழை பெய்வதற்கான சூழ்நிலை !

வடகிழக்கு பருவமழை தொடங்க சாதகமான சூழ்நிலை உள்ளதால், தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாதகமான சூழ்நிலை உருவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் ஸ்டெல்லா தெரிவித்துள்ளார். தென்மேற்கு வங்க கடல் பகுதியில், வளிமண்டலத்தில், காற்றின் மேலடுக்கு சுழற்சி நிலவி வருவதாலும், அது மேற்கு நோக்கி நகர்ந்து வருவதாலும், 48 மணி நேரத்துக்கு மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என்று அவர் கூறினார்.

ஓரிரு இடங்களில் கனமழை பெய்வதற்கான வாய்ப்பும் இருப்பதாக அவர் தெரிவித்தார். சென்னையை பொருத்த வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஓரிரு இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் ஸ்டெல்லா தெரிவித்தார்.

Exit mobile version