முகிலன் வழக்கில் துப்பு கிடைத்துள்ளது :சிபிசிஐடி போலீசார் உயர்நீதிமன்றத்தில் தகவல்

சுற்றுச்சுழல் ஆர்வலர் முகிலன் வழக்கு விசாரணையில் துப்பு கிடைத்துள்ளதாக சிபிசிஐடி போலீசார் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

சுற்றுச்சுழல் ஆர்வலர் முகிலனை கண்டுபிடித்து தரக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ் மற்றும் நிர்மல் குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணை நிலை அறிக்கையை சிபிசிஐடி காவல்துறை சார்பில் சீலிடப்பட்ட கவரில் தாக்கல் செய்யப்பட்டது. இதனை படித்து பார்த்த நீதிபதிகள், முகிலன் வழக்கு விசாரணையில் முன்னேற்றம்
ஏற்பட்டுள்ளதாகவும், காவல் துறையினருக்கு இது குறித்த துப்பு கிடைத்துள்ளதாகவும் தெரிவித்தனர். தொடர்ந்து விசாரணை மேற்கொள்ள ஏதுவாக மேலும் 3 வாரம் கால அவகாசம் வழங்கி விசாரணையை நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

Exit mobile version