எதிர்காலத்திலும் பன்னீருக்கு அதிமுகவில் இடம் கிடையாது – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்..!

எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் பொதுச்செயலாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது மிகவும் மகிழ்ச்சியான செய்தியாக உள்ளது.  இந்தத் தீர்ப்பைப் பொறுத்தவரையில் மகிழ்ச்சியான தீர்ப்பு மற்றும் தொண்டர்கள் எழுச்சியாக இதனைக் கொண்டாடி வருகிறார்கள். எங்களை ஆளாக்கி வைத்த பேரறிஞர் அண்ணா, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித் தலைவி ஜெயலலிதா ஆகியோர்களின் நினைவு இடங்களுக்கு சென்று எடப்பாடி பழனிசாமி அவர்கள் மரியாதை செலுத்தினார்கள். இந்தியாவிற்கு இதயம் அரசியலமைப்பு போன்று அதிமுகவிற்கு இதயம் பைலா. பைலா படியும் சட்டப்படியும் நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் தகவல் தெரிவித்தார்.

பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சியில் சேர்ப்பீர்களா என்ற நிரூபர்களின் கேள்விக்கு, கடிக்கும் மிருகங்களுடன் கூட வாழ்ந்துவிடலாம். ஆனால் நிறமாறிகளுடன் வாழ முடியாது. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பன்னீருக்கு நிச்சயம் அதிமுகவில் இடம் கிடையாது. கழகத்திற்கு பல துரோகங்களை செய்தார் பன்னீர். முக்கியமாக கட்சியின் அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்து அராஜகத்தில் ஈடுபட்டது, ஸ்டாலின் உடன் தொடர்பு வைத்தது, மக்களவைத் தேர்தல் தன் மகன் ஜெயிக்க மட்டுமே பாடுபட்டது என்று பலக் குற்றச்சாட்டுகள் உண்டு. அவரை தொண்டர்களே ஏற்க மறுக்கிறார்கள். ஆகவே அவருக்கு இப்பவும் சரி எதிர்காலத்திலும் சரி நிச்சயமாக அதிமுகவில் இடம் கிடையாது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் தகவல் தெரிவித்தார்.

Exit mobile version