ராயபுரத்தில் சுனாமி குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஒத்திகை

சென்னை ராயபுரத்தில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சுனாமி தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

சென்னை மாநகராட்சி சார்பில் ஜி.எம்.பேட்டையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. தேசிய பேரிடர் மீட்புப்படை, கடலோர காவல்படை, காவல்துறை உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட துறையை சர்ந்தவர்கள் ஒத்திகை நிகழ்ச்சியில் ஈடுபட்டனர்.

சுனாமி பாதிப்பின் போது எப்படி தற்காத்துக்கொள்வது, பாதிக்கப்பட்டவர்களை எவ்வாறு அப்புரப்படுத்துவது, மீட்பது போன்ற விழிப்புணர்வு ஒத்திகை செய்து காண்பிக்கப்பட்டது.

 

Exit mobile version