அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்துவதில் இருபிரிவினரிடையே ஒற்றுமை ஏற்படாவிட்டால் நீதிமன்றமே விழாக் கமிட்டி அமைக்கும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை எச்சரித்துள்ளது. மதுரை அவனியாபுரத்தில நடத்தப்படும் ஜல்லிக்கட்டி விழாக் கமிட்டியில் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் மட்டுமே முடிவெடுப்பதாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிமன்றம் விழாக் கமிட்டி அமைப்பது தொடர்பாக இரு பிரிவினரிடையே ஒற்றுமை ஏற்படாவிட்டால் நீதிமன்றமே விழாக்கமிட்டி அமைக்கும் என அறிவித்துள்ளது. சர்ச்சை தொடர்ந்தால் போட்டியை நடத்த தடைவிதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ள நீதிமன்றம், மாவட்ட ஆட்சியர்,காவல் கண்காணிப்பாளரை நேரில் ஆஜராக உத்தரவிட்டது.
Discussion about this post