மக்களின் தேவைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து செயலாற்றுவேன்: சாம் பால்

மக்களின் தேவைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, விரைந்து செயலாற்றுவேன் என்று மத்திய சென்னை பாமக வேட்பாளர் சாம் பால் தெரிவித்துள்ளார்.

அதிமுக கூட்டணி சார்பில், மத்திய சென்னையில் போட்டியிடும் பாமகவைச் சேர்ந்த நாடாளுமன்ற வேட்பாளர் சாம் பால், சென்னை ஆயிரம் விளக்கு தொகுதிக்கு உட்பட்ட இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார். அவருக்கு அப்பகுதி மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாடாளுமன்ற தேர்தலில் நிச்சயம் வெற்றி பெற்று, மத்திய சென்னை பகுதிகளில் மக்களின் பிரச்சினைகளை சரிசெய்ய நடவடிக்கை எடுப்பேன் என்று கூறினார். மக்களின் தேவைகளை விரைந்து நிறைவேற்றுவேன் என்றும் அவர் உறுதிபடி தெரிவித்தார்.

Exit mobile version