பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ பிச்சை எடுக்கவும் தயங்கமாட்டேன் – நடிகர் விஷால்

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ பிச்சை எடுக்கவும் தயங்கமாட்டேன் என நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட நடிகர் விஷால் இவ்வாறு கூறினார். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்வர் 8 வயது சிறுமி ஆயிஷா.ஆதரவற்ற இவர், கல்லீரல் பாதிப்பால் அவதிப்பட்டுவந்தார். சிறுமியின் நிலையை அறிந்த குளோபல் ஹெல்த் சிட்டி மருத்துவமனை நிர்வாகம், சிறுமிக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்தது. 8 மணி நேர தொடர்  சிகிச்சை செய்யப்பட்டது. இதில் அந்த சிறுமி பூரண குணமடைந்துள்ளார்.

இது குறித்து பேசிய நடிகர் விஷால், ஆதரவற்ற குழந்தைகளை அரவணைக்கவும், உடல் உறுப்புகளை தானமாக வழங்கவும் அனைவரும் முன்வரவேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Exit mobile version