சித்தராமையாவை முன்னிலைப்படுத்தினால் கட்சியை விட்டு விலகுவேன்-கர்நாடக முதலமைச்சர்

காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்கள் சித்தராமையாவை தொடர்ந்து முன்னிலைப்படுத்தினால், முதலமைச்சர் பதவியிலிருந்து விலகிவிடுவேன் என்று கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கர்நாடக கூட்டணி அரசில் தொடர்ந்து குழுப்பம் நீடித்து வருகிறது. இந்தநிலையில், பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் குமாரசாமி, காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் தொடர்ந்து வரம்பு மீறி பேசி வருவதாக குற்றம்சாட்டினார். இதை காங்கிரஸ் கட்சி தலைவர்கள் கட்டுப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்ட அவர், சித்தராமையாவை அவர்கள் முன்னிலைப்படுத்தி வருவதாக குற்றம்சாட்டினார். இதேநிலை நீடித்தால் முதலமைச்சர் பதவியை விட்டு விலக நேரிடும் என்று அவர் எச்சரித்தார்.

Exit mobile version