குமரியில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியுள்ளேன் – பொன்.ராதாகிருஷ்ணன்

கன்னியாகுமரியில் கடந்த 50 ஆண்டுகளில் செய்ய முடியாத பல்வேறு திட்டங்களை தான் நிறைவேற்றி உள்ளதாக குமரி நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் உள்ள அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், கூட்டணி கட்சியினரின் வாழ்த்துக்களைப் பெற்றார். பின்னர் செய்தியாளர்களைச் அவர் சந்தித்தார். அனைவரின் ஆதரவுடன் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாகவும், கன்னியாகுமரியில் 50 ஆண்டுகளில் செய்ய முடியாத பல்வேறு திட்டங்களை தான் நிறைவேற்றி உள்ளதாகவும் கூறினார். செய்த சாதனையை மக்கள் முன் வைத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Exit mobile version