தர்மபுரியில் மலத்தை கையால் அள்ள வைத்த விவகாரம்!

தருமபுரி அருகே மலத்தை கையால் அள்ள வைத்த விவகாரம் தொடர்பாக தேசிய துப்புரவு பணியாளர் ஆணைய தலைவர் நேரில் விசாரணை மேற்கொண்டார். மாரண்டஅள்ளி பேரூராட்சியில் உள்ள 15வது வார்டு பொதுக் கழிவறையில் தூய்மை பணியாளர்களான வெங்கடேசன், கோவிந்தராஜ் ஆகியோரை, சட்ட விதிமுறைக்கு புறம்பாக இரவுக் காவலர் சங்கரன் என்பவர் மனித மலத்தை கையால் அள்ள வைத்தது தொடர்பாக தேசிய துப்புரவு பணியாளர் ஆணையத்திற்கு புகார் சென்றது. இதுகுறித்து விசாரணை மேற்கொண்டதை அடுத்து, வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகத்திற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தேசிய துப்புரவு பணியாளர் ஆணைய தலைவர் வெங்கடேசன் தெரிவித்தார்.

;

Exit mobile version