குடிநீரில் மனித கழிவு கலந்த விவகாரம் !

வேங்கைவயல் பிரச்சனை தொடர்பாக தேசிய பட்டியலின ஆணையம் தலையிட வேண்டும், என டெல்லியில் அம்பேத்கர் மக்கள் இயக்கம் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அதில், வேங்கைவயல் பிரச்சனையில் இதுவரை எந்த குற்றவாளிகளும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும், தமிழக காவல்துறையும், தமிழக அரசும் மெத்தனமாக செயல்படுவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. புகார் மனுவை ஏற்றுக்கொண்ட தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய தலைவர், பாதிக்கப்பட்ட மக்களை மார்ச் 4ம் தேதி நேரில் சந்திப்பதாக உறுதியளித்துள்ளார்.

Exit mobile version