பள்ளி மாணவியை கர்பமாக் கிய காதலன்!

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். பொரத்தூர் கிராமத்தை சேர்ந்த 11ம் வகுப்பு மாணவியும், அதே பகுதியை சேர்ந்த கவியரசனும் கடந்த 2 மாதங்களுக்கு திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் தருமபுரி பேருந்து நிலையத்தில் காதல் மனைவியை தனியாக விட்டு விட்டு கவியரசன் தலைமறைவானார். இதனையடுத்து, மாணவியிடம் பெற்றோர் விசாரித்தபோது அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதனையெடுத்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், தப்பியோடிய கவியரசனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Exit mobile version