ஊழலற்ற இந்தியாவை வலியுறுத்தி இந்தியன் வங்கி சார்பில் மனிதச் சங்கிலி

சென்னையில் ‘ஊழல் தடுப்பு விழிப்புணர்வு’ வார விழாவை முன்னிட்டு இந்தியன் வங்கி சார்பில் மனிதச் சங்கிலி நடத்தப்பட்டது.

‘ஊழலற்ற இந்தியாவை உருவாக்குவோம்’ என்ற வாசகத்தை கருப்பொருளாய் கொண்டு அக்டோபர் 29-ஆம் தேதி தொடங்கி நவம்பர் 4-ஆம் தேதி வரை ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வார விழாவாக கொண்டாடப்படுகிறது.

இதன் ஒரு பகுதியாக இந்தியன் வங்கி சார்பில் , சென்னை ஸ்பென்சர் பிளாசா முதல், எத்திராஜ் மகளிர் கல்லூரி வரையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் மனிதச்சங்கிலி நடைபெற்றது. இதில் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ-மாணவிளும், இந்தியன் வங்கி அலுவலர்களும் கைகளை கோர்த்து நின்றனர்.

மனிதச்சங்கிலியில் கலந்து கொண்டவர்கள்,ஊழலற்ற இந்தியாவை உருவாக்குவோம் என்ற தலைப்பில் பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு நின்றிருந்தனர்.

Exit mobile version