சுதந்திர போராட்ட வீரர் எத்தலப்ப நாயக்கருக்கு மணிமண்டபம்

சுதந்திர போராட்ட வீரர் எத்தலப்ப நாயக்கருக்கு மணிமண்டபம் அமைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் ஜெயராம கிருஷ்ணன் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து பேசிய அவர், எத்தலப்ப நாயக்கரை பெருமைப்படுத்தும் வகையில் எழுதப்பட்ட அவரின் சிறப்பு குறித்த நூல்கள் நூலகத்தில் இடம்பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

Exit mobile version