சுதந்திர போராட்ட வீரர் ஒண்டி வீரன் நினைவு நாளையொட்டி நெல்லையில் 144 தடை உத்தரவு

சுதந்திர போராட்ட வீரர் ஒண்டி வீரனின் 247வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி நெல்லை நெற்கட்டும் சேவல் பச்சேரி கிராமத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் பல்வேறு கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் அஞ்சலி செலுத்துகின்றனர். எனவே, நெல்லை மாவட்டம் முழுவதும் நேற்று முதல் 2ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். புதிதாக சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 

Exit mobile version