தீரன் சின்னமலையின் 214-வது நினைவு தினம்: முதல்வர், துணை முதல்வர் மரியாதை

சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 214-வது நினைவு தினத்தையொட்டி சென்னையில் உள்ள அவரின் திருவுருவச் சிலைக்கு முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

சென்னை கிண்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தீரன் சின்னமலையின் திருவுருவ படத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பலர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து தீரன் சின்னமலையின் உருவ சிலைக்கு முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் மாலை அணிவித்தனர். நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இதேபோல, சேலம் மாவட்டம் சங்ககிரி மலைக்கோட்டையில், தீரன் சின்னமலை தூக்கிலிடப்பட்ட இடத்தில், அவரின் திருவுருவப் படத்திற்கு மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி மலர்தூவி மரியாதை செலுத்தினார். மாவட்ட ஆட்சியர் ராமன், மாநிலங்களவை உறுப்பினர் சந்திரசேகர் மற்றும் பலர் கலந்து கொண்டு தீரன் சின்னமலையின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

Exit mobile version