கோவில் திருவிழாவை முன்னிட்டு குதிரை,மாட்டு வண்டி பந்தயம்

திருமயம் அருகே அய்யனார் கோவில் திருவிழாவில் மாட்டு வண்டி, குதிரை வண்டி பந்தயம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள புதுநிலைப்பட்டியில் அய்யனார் கோவிலில் புரவி எடுப்பு திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி, குதிரை வண்டி பந்தயம் நடைபெற்றது. இதில் திருச்சி, மதுரை, திண்டுக்கல்,தேனி மதுரை, சிவகங்கை மாவட்டங்களை சேர்ந்த 35 ஜோடி மாட்டு வண்டிகள், 13 ஜோடி குதிரை வண்டிகள் கலந்து கொண்டன. 3 பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்றன. வெற்றி பெற்ற மாட்டுவண்டி, குதிரை வண்டி உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

Exit mobile version