சிறப்பான ஆட்சி நடத்துவதால் முதலமைச்சருக்கு கவுரவ டாக்டர் பட்டம்: ஜெயக்குமார்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கவுரவ டாக்டர் பட்டம் அளிப்பது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், ஒவ்வொரு துறையிலும் சிறப்பாக செயலாற்றுபவர்களுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுவது மரபு என்றார். வெளிநாடுகளுக்கு சென்று முதலீடுகளை ஈர்த்து சிறப்பான ஆட்சி நடத்தும் முதலமைச்சருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்குவதில் தவறில்லை என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

Exit mobile version