இயற்கை நார்களால் செய்யப்பட்ட 'மூலிகை சேலை'

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி, மூலிகை சேலையை நெசவாளர் ஒருவர் அறிமுகப்படுத்தியிருக்கிறார்.

சென்னை பல்லாவரம் அருகே, அனகாபுத்தூரை சேர்ந்த கைத்தறி நெசவாளர் சேகர், கடந்த 15 ஆண்டுகளாக, வாழைநார் மூலம் சேலை நெய்து விற்பனை செய்து வருகிறார். தற்போது, வாழை நார், அன்னாசி நார், மூங்கில் நார், ஆலுவேரா நார்களை கொண்டு மூலிகை சேலையை அவர் தயார் செய்துள்ளார்.

ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி, மூலிகை சேலை விற்பனையை தொடங்கியிருக்கிறார். இந்த சேலைகள், உடலுக்கு குளிர்ச்சி தருவதுடன், சருமப் பிரச்சினைகளையும் தீர்ப்பதாக நெசவாளர் கூறியுள்ளார். மூலிகை சேலைகள் மீது வெளிநாட்டினர் ஆர்வம் காட்டுவதாகவும் தெரிவித்திருக்கிறார்.

Exit mobile version