பதிலடி தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதால் முக்கிய நகரங்களில் பலத்த பாதுகாப்பு

பதிலடி தாக்குதலுக்காக இந்தியாவில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதால், டெல்லி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்த பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை அதிரடி தாக்குதல் நடத்தியதில் 300க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. விமானப்படை தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் நடவடிக்கையாக இந்தியா மீது தாக்குதல் நடத்த பாகிஸ்தான் தீவிரவாதிகளும், அந்நாட்டு ராணுவமும் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெல்லி, மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் அடுத்த 72 மணி நேரத்திற்கு உஷார் நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது. வட இந்தியா மற்றும் மேற்கு இந்தியாவில் உள்ள அணுசக்தி நிலையங்கள், விமானப்படை தளங்கள், கடற்படை தளங்கள், ராணுவ முகாம்கள் உள்ளிட்டவற்றில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.மேலும் ஊடுருவல்களை தடுக்க முப்படைகளும் தீவிர கண்காணிப்பில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. சர்வதேச எல்லையில் மீன்பிடிக்கும் இந்திய மீனவர்கள் உடனடியாக கரை திரும்பவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Exit mobile version