விழுப்புரம் மாவட்டத்தில் பரவலாக மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மிதமான மழை பெய்ததால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கடந்த சில நாட்களாக கடும் வெயில் வாட்டி வந்த நிலையில் கள்ளக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான சின்னசேலம் சங்கராபுரம் தியாகதுருகம் கச்சிராயபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக மிதமான மழை பெய்தது. கள்ளக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மிதமான மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் ஆடிப்பட்டம் சாகுபடிக்கு ஏற்ற சூழல் நிலவுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Exit mobile version