சென்னையில் விடிய விடிய பெய்த கன மழையால் வெள்ளப்பெருக்கு

தாம்பரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக அப்பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

தாம்பரத்தை அடுத்த அகரம், தென் தாம்பரம் செல்லக்கூடிய சாலையில், நேற்று இரவு கனமழை கொட்டித் தீர்த்தது. சுமார் 14 சென்டி மீட்டர் அளவுக்கு மழை பதிவானது. இதனால், அகரம், திருவஞ்சேரி, பதுவஞ்சேரி, வெங்கம்பாக்கம், மபேடு உள்ளிட்ட இடங்களில் சாலைகளில் மழைநீர் 2-ல் இருந்து 3 அடிக்கும் மேல் உள்ளது.

சாலையின் குறுக்கே மழைநீர் செல்வதால் 5 இடங்களில் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. சென்னை புறநகர் பகுதிகளான தாம்பரம் அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள அஸ்தினாபுரம், குரோம்பேட்டை, பல்லாவரம், மாடம்பாக்கம் உள்ளிட்ட இடங்களிலும் மழை நீர் தேங்கியது. கனமழை காரணமாக அப்பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயரும் சூழல் ஏற்பட்டுள்ளது.

Exit mobile version