திருத்தணி சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் பலத்த மழை பெய்தது. காற்றுடன் பெய்த பலத்த மழையால் சில இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. சிறிது நேரம் வெளுத்து வாங்கிய மழையால், திருத்தணி, அரக்கோணம் சாலைகளில் மழைநீர் ஆறாக ஓடியது. தொடர் மழையால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து வருவதால், பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதேபோல், ஈரோடு மாவட்டம் அந்தியூர் அம்மாபேட்டை, நெரிஞ்சிப்பேட்டை, நால்ரோடு, வெள்ளித்திருப்பூர் உள்ளிட்ட கிராமங்களில் மூன்றாவது நாளாக தொடர்ந்து மழை பெய்தது. முதலமைச்சரின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் நீர்நிலைகள் தூர்வாரப்பட்டு வரும் நிலையில், அந்தியூர் சுற்றுவட்டார பகுதியில் தொடர் மழையால் தூர்வாரப்பட்டு உள்ள நீர் நிலைகளில் மழைநீர் தேங்க ஆரம்பித்து உள்ளது. இதனால் இந்த ஆண்டு நிலத்தடி நீர் மட்டம் உயரும் என்பதால், விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

Exit mobile version