கர்நாடக மாநிலத்தில் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பலத்த மழை

தென்பெண்ணையாற்றின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் இரண்டு நாட்களாகப் பலத்த மழை பெய்து வருவதால் ஓசூர் அருகே உள்ள கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் பெங்களூர், நந்திமலை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாகப் பலத்த மழை பெய்து வருவதால் தென்பெண்ணையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள கெலவரப்பள்ளி அணைக்கு நொடிக்கு 408 கனஅடி நீர் வந்துகொண்டிருக்கிறது.

44 அடி உச்ச நீர்மட்டம் கொண்ட அணையில் 42 அடிக்குத் தண்ணீர் நிரம்பியுள்ளது. அணையின் பாதுகாப்புக் கருதியும், நீரின் அளவு தொடர்ந்து அதிகரிக்கும் என்பதாலும் அணையிலிருந்து நொடிக்கு 568 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணை முழுக் கொள்ளளவை எட்ட இன்னும் 2 அடிகளே உள்ள நிலையில் நீர்த்தேக்கம் கடல்போல் காட்சியளிக்கிறது.

Exit mobile version