இலங்கை குண்டு வெடிப்பு எதிரொலி:மதுரை ரயில் நிலையத்தில் தீவிர சோதனை

இலங்கையில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவத்தின் எதிரொலியாக மதுரை ரயில் நிலையத்தில் போலிசார் பயணிகளிடம் தீவிர சோதனை நடத்தினர்.

இலங்கையில், ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டத்தின் போது தேவாலயம் உள்ளிட்ட 9இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்ததில் 253 பேர் பரிதாபமாக உயிரழந்தனர். படுகாயமடைந்த 500க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் எதிரொலியாக தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களில் உள்ள 200க்கும் மேற்பட்ட ரயில்நிலையங்களில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர். மதுரை ரயில் நிலையத்தில் 100க்கும் மேற்பட்ட ரயில்வே போலீசார் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்பநாய் உதவியுடன் சோதனை நடத்தினர்ரயில் நிலையத்திற்கு வருகைதரும் பயணிகள் மற்றும் பொதுமக்களின் உடமைகள் முழுமையாக சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர்.மேலும், சிசிடிவி கேமரா மூலமும் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

Exit mobile version