பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய கோரி வழக்கு – தமிழக அரசு 6 வாரத்திற்குள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

 

குடும்ப வன்முறைகளை தடுக்க பாதுகாப்பு அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறைகளை தடுக்கவும், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், மாநில அரசுகள் குடும்ப வன்முறைச் சட்டத்தின் படி பாதுகாப்பு அதிகாரிகளை நியமிக்க வேண்டும் எனவும் மத்திய அமைச்சர் மேனகா காந்தி கடிதம் எழுதியிருந்தார். அதனடிப்படையில் தாலுகா அளவில் பாதுகாப்பு அதிகாரிகளை நியமிக்க உத்தரவிட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் மனு தாக்கல் செய்திருந்தார்.

இதை விசாரித்த தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, தமிழக அரசு 6 வாரத்திற்குள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஜனவரி 25-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

Exit mobile version