தமிழக முதல்வர் வயலில் வேலை செய்வதை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது: துணை குடியரசுத் தலைவர்

முதலமைச்சர் பழனிசாமி வயலில் இறங்கி வேலை செய்வதை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது என்று குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொங்கல் பண்டிகையை தனது சொந்த ஊரான சேலம் மாவட்டம் சிலுவம்பாளையத்தில், அங்குள்ள மக்களுடன் கொண்டாடினார். வயல்களில் அறுவடை செய்து, உற்றார் உறவினர்களுடன் பொங்கல் கொண்டாடிய முதலமைச்சர் குறித்த செய்திகள் வெளியானது. இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, தமிழக முதலமைச்சர் பழனிசாமி வயலில் இறங்கி வேலை செய்வதை பார்க்கையில் மகிழ்ச்சியாக உள்ளதாகவும், தனது ஆதாரமான விவசாயத்தை அவர் மறக்காமல் இருப்பது பாராட்டுக்குரியது என்று பதிவிட்டுள்ளார்.

மேலும், முதலமைச்சர் பழனிசாமி மக்களுக்கு ஊக்கம் தருவதாகவும், விவசாயத்தை லாபகரமானதாக மாற்றுவதில் அனைவரும் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version