சொந்த தொழில் செய்து முன்மாதிரியாக வாழ்ந்து வரும் மாற்றுத்திறனாளி

கடலூரை சேர்ந்த மாற்றுத்திறனாளி இளைஞர் ஒருவர் தனது சொந்த முயற்சியில் பஞ்சர் கடை நடத்தி லாபம் ஈட்டி வருவது, பொதுமக்களிடையே வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது.

சேத்தியாதோப்பை சேர்ந்த இளவரசன் என்பவர் பிறவி மாற்றுத்திறனாளி. சிறு வயதிலிருந்தே வாகன பழுது நீக்கம் செய்வதை பார்த்து வளர்ந்த இளவரசனுக்கு தானும் அதனை செய்ய வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது. பஞ்சர் போடும் வேலை முதல் கனரக வாகனங்களுக்கு டயர் கழற்றி மாட்டும் வேலை வரை பார்த்து அசத்துகிறார்.

உடலில் குறைபாடு இருந்தாலும், தனது உள்ளத்தில் எவ்விதமான குறைபாடும் இல்லை என நிரூபித்து வாழ்ந்து காட்டி வருகிறார் இளவரசன்.

Exit mobile version