எச்.ராஜா உயர்நீதிமன்றத்தில் ஆஜர்

நீதிமன்றத்தை தரக்குறைவாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜராகி உள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது, பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா நீதித்துறையையும், காவல் துறையையும் கடுமையாக விமர்சித்ததாக சர்ச்சை எழுந்தது. அவரது பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், எச்.ராஜா மீது சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்தது.

இந்த வழக்கில் எச்.ராஜா நேரில் ஆஜராக உத்தரவிட்டிருந்தது. இந்தநிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் எச்.ராஜா இன்று ஆஜரானார். இந்த வழக்கை, நீதிபதிகள் சி.டி செல்வம் மற்றும் நிர்மல்குமார் ஆகியோர் அமர்வு விசாரிக்க உள்ளது.

Exit mobile version