தீவிரவாதிகள் – பாதுகாப்புப் படையினர் இடையே துப்பாக்கிச்சூடு

காஷ்மீரின் ஹந்த்வாரா மாவட்டத்தில், தீவிரவாதிகள் மற்றும் பாதுகாப்புப் படையினர் இடையே நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில், ஒரு தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார்.

கடந்த வாரங்களில், எல்லைப்பகுதிகளில் தொடர் தீவிரவாத ஊடுருவல், மற்றும் அதை முறியடிக்கும் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக ஹந்த்வாராவின் கிரால்குண்ட் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியுள்ளதாக கிடைத்த தகவலையடுத்து, அப்பகுதியில் இரவு முழுவதும் பாதுகாப்புப் படையினர் சோதனை மேற்கொண்டனர்.அப்போது அங்கு மறைந்திருந்த தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டனர். இதையடுத்து, பாதுகாப்புப் படையினரும் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர். தொடர்ந்து பல மணி நேரங்கள் நீடித்த துப்பாக்கிச்சூட்டில், ஒரு தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான்.

அவனிடமிருந்து துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும் சில தீவிரவாதிகள் அப்பகுதியில் பதுங்கியிருக்கலாம் என நம்பப்படுவதால், பாதுகாப்புப் படையினர் தொடர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

Exit mobile version