ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் ஜி.எஸ்.டி. மூலம் ரூ.98,202 கோடி வசூல்

ஆகஸ்ட் மாதத்தில் ஜி.எஸ்.டி மூலமாக 98 ஆயிரத்து 202 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

மத்திய மற்றும் மாநில ஜி.எஸ்.டி மூலம் கிடைத்திருக்கும் வருவாய் குறித்து மத்திய நிதியமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ஆகஸ்ட் மாதத்தில் மத்திய ஜி.எஸ்.டி மூலம் 17 ஆயிரத்து 733 கோடி ரூபாய் வருவாயும், மாநில ஜி.எஸ்.டி மூலம் 24 ஆயிரத்து 239 கோடி ரூபாய் வருவாயும் மற்றும் ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி மூலம் 48 ஆயிரத்து 958 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் ஜி.எஸ்.டி மூலமாக 98 ஆயிரத்து 202 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

Exit mobile version