விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி எஃப் 12!

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரி போட்டால் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து ஜிஎஸ்எல்வி எஃப் 12 விண்ணில் பாய்ந்தது.

இன்று விண்ணில் பாய்ந்தது எப் 12 ராக்கெட். இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்திற்கு, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில், சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையம் உள்ளது. அங்குள்ள ஏவுதளத்தில் இருந்து இஸ்ரோவின், ‘ஜி.எஸ்.எல்.வி. எப் 12’ ராக்கெட் மற்றும், ‘என்.வி.எஸ்., – 01’ செயற்கைக் கோளை சுமந்தபடி இன்று காலை, 10:42 மணிக்கு விண்ணில் பாய்ந்தது.

இதற்கான ‘கவுன்ட் டவுன்’ நேற்று காலை, 7:21 மணிக்கு துவங்கியது. செயற்கைக்கோளின் எடை, 2,232 கிலோ. இது, கடல், வான்வழி, தரை வழி போக்குவரத்தின் வழிகாட்டி சேவைகளுக்கு அதிகம் பயன்படுத்தப்படும். ஜி.எஸ்.எல்.வி., – 12 ராக்கெட்டானது, ஜி.எஸ்.எல்.வி., வகையில் இஸ்ரோ அனுப்பும், 15வது ராக்கெட். பூமியில் இருந்து இந்த ராக் கெட், செயற்கைகோள், எரிபொருள் உட்பட மொத்தம், 420 டன் எடையை சுமந்து செல்ல உள்ளது.

Exit mobile version