கேழ்வரகினை பயிரிடுவதால் அதிக லாபம் கிடைப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சி

கேழ்வரகு விளைச்சல் அதிகரித்துள்ளதால், நல்ல லாபம் கிடைப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னத்தூர் பகுதிகளில் விவசாயிகள் அதிகளவில் கேழ்வரகை பயிரிட்டுள்ளனர். இந்த பகுதியை சேர்ந்த குணசேகரன் என்பவர் பல ஆண்டுகளாக தொடர்ச்சியாக இயற்கை உரம், மாட்டு சானம், தழை ஆகியவை கொண்டு கேழ்வரகு பயிரிட்டால் அதிக லாபம் தருவதாக தெரிவித்துள்ளார். இப்பயிரை ஆண்டுதோறும் தொடர்ச்சியாக பயிரிட்டு வருகிறார். இதனால் ஏக்கருக்கு 20 ஆயிரம் வரை செலவு ஏற்படுவதாகவும், செலவினங்கள் போக 40 ஆயிரம் ரூபாய் லாபம் கிடைப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version