மருத்துவர்களை தாக்கினால் 10 ஆண்டுகள் வரை சிறை: மத்திய அரசு

மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களை தாக்கினால் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கக்கூடிய புதிய சட்டத்தை மத்திய அரசு கொண்டு வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களாக பல்வேறு மாநிலங்களில் பல்வேறு காரணங்களுக்காக மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் மீதான தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனை கண்டித்து நாடு முழுவதும் மருத்துவர்கள் வேலைநிறுத்த போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனைத் தொடந்து வன்முறை மற்றும் சேதத்தை தடுக்கும் வரைவு மசோதாவை உருவாக்கும் பணியை 8 பேர் கொண்ட ஒரு துணை குழுவிடம் மத்திய சுகாதார அமைச்சகம் ஒப்படைத்தது. இந்த குழு உருவாக்கி உள்ள அறிக்கை, நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்ய உள்ளதாகவும், அதில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களை தாக்கினால் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version