தீபாவளியையொட்டி நியாய விலைக் கடைகளை தொடர்ந்து 4 நாட்கள் திறக்க உத்தரவு – தமிழக அரசு

 

தீபாவளி பண்டிகையையொட்டி பொதுமக்கள் வசதிக்காக தொடர்ந்து 4 நாட்களுக்கு நியாய விலைக் கடைகளை திறக்க தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

தீபாவளி பண்டிகை வருவதையொட்டி பொதுமக்கள் வசதிக்காக அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு நவம்பர் 2, 3, 4, 5 ஆகிய நான்கு நாட்களுக்கு நியாய விலை கடைகள் திறந்து இருக்கும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் நியாய விலைக் கடைகளில் விற்கும் அனைத்து பொருட்களும் அந்த தொடர் நாட்களில் கிடைக்கும் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தொடர் வேலை நாட்களுக்கு பதிலாக நவம்பர் 16-ம் தேதி தமிழகத்திலுள்ள அனைத்து நியாய விலைக் கடைகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பண்டிகை நாட்களில் நியாய விலைக்கடைகள் தொடர்ந்து இயங்கும் என்ற அரசின் அறிவிப்பை நுகர்வோர் வரவேற்றுள்ளனர்.

Exit mobile version