புதுச்சேரி பெரிய கடை காவல் நிலையத்தில் ஆளுநர் கிரண்பேடி திடீர் ஆய்வு

புதுச்சேரியில் காதல் ஜோடியை மிரட்டி பணம் பறித்த சம்பவம் தொடர்பாக பெரிய கடை காவல் நிலையத்தை துணை நிலை ஆளுநர் கிரண்பேடி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

புதுச்சேரியில் இரண்டு நாட்களுக்கு முன்பு சுற்றுலா வந்த காதல் ஜோடியை மிரட்டி அவர்களிடமிருந்து பெரிய கடை காவல்துறையினர் பணம் பறித்தாக துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு புகார் வந்தது. இதையடுத்து பெரியகடை காவல்நிலையத்திற்கு திடீரென சென்ற துணை நிலை ஆளுநர் கிரண்பேடி காவல்துறை அதிகாரிகளிடம் விசாரணை மேற்கொண்டார். அப்போது ஆய்வின் போது பெண் காவலர்களை உடன் அழைத்து செல்லாதது ஏன் என்பது உள்ளிட்ட கேள்விகளை எழுப்பினார். மேலும், இது தொடர்பாக முழுமையான விசாரணை நடத்த காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

முன்னதாக காவல்துறை தலைவர், சம்பந்தபட்ட அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்துள்ளது குறிப்பிடதக்கது.

Exit mobile version