ஆளுநருக்கு எதிராக முதலமைச்சர் நாராயணசாமி 4-வது நாளாக தர்ணா

புதுவையில் துணை துணைநிலை ஆளுநருக்கு எதிராக மாநில முதலமைச்சர் நாராயணசாமி 4-வது நாளாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

அரசின் அனைத்து நிர்வாகத்திலும் ஆளுநர் தலையிட்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து முதலைமச்சர் நாராயணசாமி தொடர் போராட்டம் நடத்தி வருகிறார். முன்னதாக ஆளுநர் கிரண்பேடி கடந்த 11 ஆம் தேதி கட்டாய ஹெல்மெட் சட்டத்தை அமல்படுத்தினார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக முதலமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள், கூட்டணி கட்சியினர் ஆளுநர் மாளிகைக்கு எதிரே தர்ணாவில் ஈடுபட்டனர்.

இந்தநிலையில் மாளிகையை சுற்றிலும் காங்கிரசார் முற்றுகையிட்டதால் ஆளுநர் சில தினங்களுக்கு முன்பு டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். தொடர்ந்து 4-வது நாளாக போராட்டத்தில் முதலமைச்சர் நாராயணசாமி ஈடுபட்டு வருகிறார்.

Exit mobile version