தமிழக அரசின் கோரிக்கையை ஏற்ற ஆந்திர மாநில அரசு

ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து சென்னை மக்களின் குடிநீர் தேவையை தீர்க்கும் வகையில் கிருஷ்ணா நதி நீர் திறக்கப்பட்டுள்ளது.

சென்னை மக்களின் குடிநீர் தேவையை தீர்க்க தண்ணீர் திறந்து விடக்கோரி ஆந்திர மாநில முதலமைச்சரிடம் தமிழக அரசு கோரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில் தமிழக அரசின் கோரிக்கையை ஏற்ற ஆந்திர மாநில அரசு கண்டலேறு அணையிலிருந்து வினாடிக்கு 1000 கன அடி நீரை திறந்து விட்டுள்ளது. இந்த நீரானது 152 கிலோ மீட்டர் தூரம் பயணித்து தமிழக – ஆந்திர எல்லையான ஊத்தூக்கோட்டை ஜீரோ பகுதியை திங்கட்கிழமை வந்தடையும் என கிருஷ்ணா நதிநீர் திட்ட செயற்பொறியாளர் மரிய ஹென்றி ஜார்ஜ் தெரிவித்துள்ளார். தற்போது 1000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ள நிலையில் மாலை நீர்திறப்பு அதிகரிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

Exit mobile version